- மதுரை மத்திய சிறைச்சாலை
- மதுரை
- இந்திய மகளிர் மற்றும் பல் மருத்துவ சங்கத்திற்கான மதுரை யாதவ கலைக் கல்லூரி
- நீதிமன்றம்
- மதுரை கிளை
- நீதிபதி
- சுவாமிநாதன்
- மதுரை மத்திய
- சிறையில்
- தின மலர்
மதுரை, மார்ச் 25: மதுரை யாதவா மகளிர் கலைக்கல்லூரி மற்றும் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில், மதுரை மத்திய சிறையில் நேற்று கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் துவக்கி வைத்து பேசினார். மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
முகாமினை மதுரை யாதவா மகளிர் கலைக் கல்லூரி சேர்மன் அருண் போத்திராஜ் ஒருங்கிணைத்தார். இந்திய பல் மருத்துவ சங்கத்தை சேர்ந்த 6 டாக்டர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இம்மருத்துவ முகாமில் 51 ஆண்கள், 36 பெண்கள் என, 87 சிறைவாசிகள் மற்றும் 7 பணியாளர்கள் பயன்பெற்றனர். மேலும் சிறையில் உள்ள தொழிற்சாலைகள், இசைப்பள்ளி மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள சந்தை ஆகியவற்றை, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
The post மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.